மாந்தோட்டத்தில் முகாமிட்ட யானைகள் : விவசாய பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்
பழனியருகே மாந்தோட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.
பழனியருகே மாந்தோட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். பழனியை அடுத்த சட்டப்பாறை பகுதியில் உள்ள மாந்தோட்டத்திற்குள் நள்ளிரவில் புகுந்த பத்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் அங்கேயே முகாமிட்டுள்ளன. இதனையறிந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். யானைகள் நடமாட்டத்தால் அப்பகுதியில் விவசாய பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Next Story