ரயில்வே இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம் : 2 வது நாளாக தொடரும் பணி
சென்னை வேளச்சேரியில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை, தொடர்ந்து இரண்டாவது நாளாக அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
ரெயில் நிலையத்திற்கு சொந்தமான இந்த இடத்தை ஆக்கிரமித்து தனி நபர் வீடுகள், கடைகள் என 400க்கும் மேற்பட்ட கட்டிடங்களை கட்டியுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், இடத்தை காலி செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் படி, சென்னை மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.
Next Story