தென் மாவட்டங்களில் இரட்டை ரயில் பாதை திட்டம் : ரயில் பாதை அமைக்க மண் கிடைப்பதில் தாமதம்

ரயில் பாதை அமைக்க தேவையான மண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தென் மாவட்டங்களில், இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தென் மாவட்டங்களில் இரட்டை ரயில் பாதை திட்டம் : ரயில் பாதை அமைக்க மண் கிடைப்பதில் தாமதம்
x
ரயில் பாதை அமைக்க தேவையான மண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தென் மாவட்டங்களில், இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 3 ஆயிரத்து 628 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நில எடுப்பு பணிகள் முடிவடைந்து பாலங்கள், சிறு பாலங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில், ரயில் பாதை அமைக்க மண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இறுகும் தன்மை கொண்ட செம்மண் விலை அதிகமாக இருப்பதாலும், மண் அள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாலும் ரயில் பாதை பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பருவமழைக்கு முன்னர் தேவையான மண் கிடைத்தால் மட்டுமே ரயில் பாதை குறிப்பிட்ட காலத்தில் முடிவடையும் என்று மக்கள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்