குழந்தைகளை வகுப்புக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு : மாணவர்களின்றி பள்ளிக்கு வரும் 2 ஆசிரியர்கள்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பெருவளநல்லூர் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளியில் போதிய வகுப்பறைகள், அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கு படிக்கும் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பவில்லை .
குழந்தைகளை வகுப்புக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு : மாணவர்களின்றி பள்ளிக்கு வரும் 2 ஆசிரியர்கள்
x

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பெருவளநல்லூர் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளியில் போதிய வகுப்பறைகள், அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கு படிக்கும் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் செல்லாமல் 2 ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்து செல்கின்றனர். பள்ளி கட்டடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும், போதிய வகுப்பறை கழிவறைகள் இல்லை என்று புகார் தெரிவித்துள்ள பெற்றோர்கள் உரிய வசதி செய்து கொடுத்தால் மட்டுமே தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். 
 


Next Story

மேலும் செய்திகள்