ஆட்டோ மீது லாரி மோதி விபத்து : பள்ளி மாணவ மாணவிகள் 8 பேர் படுகாயம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ரங்கசாமிபட்டியில் தனியார் பள்ளியில் பயிலும் 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.
ஆட்டோ மீது லாரி மோதி விபத்து : பள்ளி மாணவ மாணவிகள் 8 பேர் படுகாயம்
x
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ரங்கசாமிபட்டியில் தனியார் பள்ளியில் பயிலும் 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, அந்த பகுதியில் மேலும் ஒரு மாணவரை ஏற்றுவதற்காக ஆட்டோ நின்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் மாணவ மாணவிகள் 8 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்