திருவள்ளூர் : டாஸ்மாக் பூட்டை உடைத்து கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் அரசு மதுக்கடை உள்ளது.
திருவள்ளூர் : டாஸ்மாக் பூட்டை உடைத்து கொள்ளை
x
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் அரசு மதுக்கடை உள்ளது. நள்ளிரவில்  கடையின் இரும்பு கிரில் கேட், இரும்பு ஷட்டர் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த விலை உயர்ந்த மதுபாட்டில்களை அள்ளிச் சென்றுள்ளனர். கடையில் இருந்த விற்பனை தொகை 13 ஆயிரம் ரூபாய், ஏ.டி.எம். கார்டு ஸ்வீப் செய்யும் இயந்திரத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட மதுபாட்டில்கள், ரொக்க பணத்தின் மதிப்பு 40 ஆயிரம் ரூபாய். கடந்த 4 நாட்களுக்கு முன்னர் அங்கு கொள்ளை முயற்சி நடைபெற்ற நிலையில், திருட்டு சம்பவம் அரங்கேறி இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்