சென்னையில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சென்னையில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
சென்னையில், சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. செங்கல்பட்டை சேர்ந்த சீதாபதி என்பவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரை பார்த்து விட்டு காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். டிடிகே சாலையில் கார் சென்ற போது, திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து அங்கு சென்ற மயிலாப்பூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
Next Story