கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதி பாட்ஷாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

அல் - உம்மா தலைவர் பாட்ஷாவுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி அவரது மகள் முபீனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதி பாட்ஷாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
x
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதியாக கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல் - உம்மா தலைவர் பாட்ஷாவுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி அவரது மகள் முபீனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவருக்கு பரோல் வழங்கவேண்டும் என்று கோரியிருந்தார். இதற்கிடையே, இலங்கை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ள நிலையில் சட்டம் -  ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி, பாட்ஷாவுக்கு பரோல் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, பாட்ஷாவுக்கு  ஜூன் 20 ம் தேதி முதல் 15 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்