போலீசார் பிடிக்க சென்ற போது உடலை பிளேடால் கிழித்துக் கொண்ட நபர் : வேகமாக பரவி வரும் வீடியோவால் பரபரப்பு

நெய்வேலியில் சவால் விட்ட கஞ்சா வியாபாரியை போலீசார் பிடிக்க சென்ற போது தனது உடலை பிளேடால் கிழித்துக் கொண்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
போலீசார் பிடிக்க சென்ற போது உடலை பிளேடால் கிழித்துக் கொண்ட நபர் : வேகமாக பரவி வரும் வீடியோவால் பரபரப்பு
x
கடலூர் மாவட்டம், நெய்வேலியில், சவால் விட்ட கஞ்சா வியாபாரியை போலீசார் பிடிக்க சென்ற போது தனது உடலை பிளேடால் கிழித்துக் கொண்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. பெங்களூர் மணிகண்டன் என்ற கஞ்சா வியாபாரியை,போலீசார் கைது செய்ய மந்தாரக்குப்பம் பேருந்து நிலையத்திற்கு சென்றனர். அப்போது கையில் பிளேடு உடன் இருந்த கஞ்சா வியாபாரி போலீசாரை பார்த்து மிரட்டியதுடன் தனது உடல் முழுவதும் பிளேடால் கிழித்துக் கொண்டார். இதனை கண்ட போலீசார் அவரை பிடிக்காமல் சென்று விட்டனர். பின்னர் வீட்டிற்கு சென்ற மணிகண்டனை போலீசார் வளைத்துப் பிடித்து கைது செய்தனர். போலீஸார் மணிகண்டனை பிடிக்கச் சென்றபோது தனது உடலை பிளேடால் கிழித்துக் கொண்ட காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்