ஒரகடத்தில் உள்ள தாமரை குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் : நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

சென்னை ஒரகடத்தில் உள்ள தாமரை குளத்தில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
ஒரகடத்தில் உள்ள தாமரை குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் : நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
x
சென்னை ஒரகடத்தில் உள்ள தாமரை குளத்தில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. கடும் வெயிலின் வெப்பம்  தாங்காமலும், ஆக்சிஜன் குறைபாடு காரணமாகவும் தண்ணீரில் மீன்கள் செத்து மிதப்பதாக கூறப்படுகிறது. கடும் துர்நாற்றம் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கூறும் பொதுமக்கள், சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக இறந்த மீன்களை அப்புறப்படுத்தி, குளத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்