திருமயம் அருகே ஒரே இடத்தில் 19 ஐம்பொன் சிலைகள் மீட்பு

மரத்தை வெட்டும் போது ஒரே இடத்தில் புதைத்து வைக்கப் பட்டிருந்த 19 ஐம்பொன் சிலைகள் கிடைத்திருப்பது அதிகாரிகளையும் பொதுமக்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
திருமயம் அருகே ஒரே இடத்தில் 19 ஐம்பொன் சிலைகள் மீட்பு
x
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பேரையூரில் நாகநாதர் சுவாமி கோயில் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரங்களை  ஜேசிபி இயந்திரம் மூலம் வெட்டும் பணி நடைபெற்றது. அப்போது ஒரு மரத்தின் அடியில் தோண்டத் தோண்ட சிலைகளாக வெளியே வரத் தொடங்கியது. தகவல் அறிந்த திருமையம் தாசில்தார் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூமிக்கடியில் எடுத்த சிலைகளை சோதனை செய்தனர். 3 அம்பாள், நடராஜர், விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட 19 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஐம்பொன்னில் செய்யப்பட்ட அந்த சிலைகளின் தொன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்