தமிழகத்தில் அனைத்து பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் : கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மழை நீரை சேமிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மழை நீரை சேமிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, சென்னை மாவட்ட தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை கூட்டிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, மழைக்காலம் தொடங்க இருப்பதால், சென்னையில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும், இந்த வார இறுதிக்குள் தங்கள் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். மழை பெய்யும்போது, மொத்த நீரும் அதில் சேரும் வகையில் ஏற்பாடு செய்திருக்க வேண்டும் எனவும், அதன் பயன்களை மாணவர்களிடம் எடுத்துக்கூற வேண்டும் எனவும் திருவளர்செல்வி உத்தரவிட்டார்.
Next Story