தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் மற்றும் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் திரண்ட அந்த அமைப்பினர் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பொய்யான காரணங்களை கூறி கடந்த ஓராண்டு காலமாக அரசு மணல் குவாரிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது ஏன்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். தமிழகத்தில் காலாவதியான சுங்கவரி மையங்களை தொடர்ந்து நடத்தி வருவதற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Next Story