ஆவடி பெருநகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியீடு

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பெருநகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
ஆவடி பெருநகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியீடு
x
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்பட 14 மாநகராட்சிகள் உள்ள நிலையில் 15 வது மாநகராட்சியாக ஆவடி உதயமாகி உள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதன் மூலம், குடிநீர், கழிவு நீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட வசதிகள் மேம்படும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் சொத்து வரி, குடிநீர் வரி போன்றவை அதிகரிக்கும். இதில் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகளும் திருநின்றவூர் பேரூராட்சியும் இடம் பெற்றுள்ளது. ஆவடி மாநகராட்சி 148 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளதுடன் சுமார் 6 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை கொண்டதாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்