தமிழகத்தில் நீர்மேலாண்மைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

தமிழகத்தில் நீர்மேலாண்மைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நீர்மேலாண்மைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
x
தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில், தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மீஞ்சூர், நெம்மோலி ஆலைகளில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும், கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்து வருவதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பதிலில் திருப்தி அடையாத நீதிபதிகள், தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கண்டனத்தை பதிவு செய்தனர். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஏரி, குளங்களை தூர்வாரவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் எடுத்த  நடவடிக்கை என்ன? மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை என்ன? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட நீதிபதிகள் இது தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வாரம் கெடு விதித்து வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்