வீடுகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு - போலீசாருடன் வாக்குவாதம் நடத்திய பொதுமக்கள்

நெய்வேலி என்எல்சி பகுதியில் உள்ள வீடுகளை அப்புறப்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வீடுகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு - போலீசாருடன் வாக்குவாதம் நடத்திய பொதுமக்கள்
x
நெய்வேலி என்எல்சி பகுதியில் உள்ள தாண்டவன் குப்பம் பகுதியில் பல ஆண்டுகளாக ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் என்எல்சி முதல் சுரங்க விரிவாக்க பணிக்காக வீடுகளை காலி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக மாற்று இடத்தில் இடம் தருவதாக கூறியதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் தாண்டவன்குப்பம் பகுதிக்கு வந்த போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்