"தகாத செயலில் ஈடுபட்டால் வேலைக்கு ஆபத்து" - மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

கல்லூரிகளில் நேற்று முதல்நாள் வகுப்புகள் தொடங்கியது. இதையொட்டி, சென்னை காவல் துறையின் சார்பில் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
தகாத செயலில் ஈடுபட்டால் வேலைக்கு ஆபத்து - மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
x
சென்னை காவல் துறையின் சார்பில் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. கல்லூரி வாயிலில் இந்த பிரசுரங்களை மாணவர்களுக்கு போலீசார் வழங்கினர். மேலும், தடை செய்யப்பட்ட பஸ் டே கொண்டாட்டமோ அல்லது வேறு எந்த தகாத செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அந்த நோட்டீசில் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். அப்படி ஈடுபட்டால், தங்களுடைய எதிர்காலத்தில் வேலைக்கோ மேற்படிப்பிற்கோ பெரும் தடையாக இருக்கும் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்