ரவுடி வல்லரசு என்கவுன்டர் விவகாரம் : தமிழக அரசு பதில் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

வல்லரசு என்கவுன்டர் குறித்து அறிக்கை அளிக்கும்படி, தமிழக பொதுத்துறை செயலருக்கு , மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ரவுடி வல்லரசு என்கவுன்டர் விவகாரம் : தமிழக அரசு பதில் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
x
வல்லரசு என்கவுன்டர் குறித்து அறிக்கை அளிக்கும்படி, தமிழக பொதுத்துறை செயலருக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாதவரம் அருகில் வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி வல்லரசு, கடந்த 15 ஆம் தேதி போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து தாமாக முன் வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி மீனாகுமாரி, என்கவுன்டர் குறித்து விரிவாக விசாரணை நடத்தி 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய டிஜிபிக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்கும்படி பொதுத்துறை செயலாளருக்கும், நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்