"சூதாட்ட கிளப்பை அகற்ற வேண்டும்" - தோப்பு வெங்கடாசலம்

பெருந்துறையில் செயல்பட்டு வரும் சூதாட்ட கிளப்பை அகற்ற வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
சூதாட்ட கிளப்பை அகற்ற வேண்டும் -  தோப்பு வெங்கடாசலம்
x
பெருந்துறையில் செயல்பட்டு வரும் சூதாட்ட கிளப்பை அகற்ற வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் கேட்டுக்கொண்டுள்ளார். தாம் அமைச்சராக பதவி வகித்த போது பெருந்துறையில் இருந்த மனமகிழ் மன்றம் அகற்றபட்டு அங்கு பேரூராட்சி அலுவலகம் கட்டிக்கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது சந்தைப்பேட்டை பகுதியில் சூதாட்ட கிளப், மனமகிழ் மன்றம் மற்றும் மதுபான பார் அமைத்து இருப்பது பொதுமக்கள் மத்தயில் முகச்சுழிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சூதாட்ட கிளப்பை மூட காவல்துறை தயாராக இருப்பதாகவும், ஆனால் காவல்துறையின் கைகளை கட்டி போட்டது யார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் தோப்பு வெங்கடாசலம் கேட்டுக்கொணடுள்ளார். பெருந்துறை தொகுதிக்கு கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றித்தர வேண்டும் என்றும் தோப்பு வெங்கடாசலம் கேட்டுக்கொண்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்