மெல்ல மெல்ல விதவையாகும் பேருந்து நிலையம்...

பேருந்து நிறுத்தத்தின், அவல நிலையைச் சுட்டிக்காட்டி, 'கணவனைக் காணவில்லை' என்ற வைக்கப்பட்ட ப்ளக்ஸ் பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மெல்ல மெல்ல விதவையாகும் பேருந்து நிலையம்...
x
பேருந்து நிறுத்தத்தின், அவல நிலையைச் சுட்டிக்காட்டி, 'கணவனைக் காணவில்லை' என்ற வைக்கப்பட்ட ப்ளக்ஸ் பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே அம்மாபட்டினம் கடைவீதியில், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து, சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேருந்து நிறுத்தம் கட்டி முடிக்கப்பட்டது. 5 மாதங்களுக்கு முன்பு பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்ட நிலையில், பேருந்து நிறுத்தத்தில் எந்த ஒரு பேருந்தும் நிற்பதில்லை. இந்நிலையில், 'கணவனைக் காணவில்லை' என்று பேருந்து நிறுத்தம் அருகில், பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. 'மெல்ல மெல்ல விதவையாகி வருகிறது' என்றும் அதில் எழுதப்பட்டுள்ளது. இனியும், பேருந்துகள் நின்று செல்லாவிட்டால், பல்வேறு போராட்டங்கள் நடத்தப் போவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்