குடிநீர் கேன்களில் நெளியும் புழுக்கள்

'சுகாதாரமற்ற குடிநீரை விற்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குடிநீர் கேன்களில் நெளியும் புழுக்கள்
x
'சுகாதாரமற்ற குடிநீரை விற்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒசூர் அருகே தேன்கனிகோட்டையில், ஸ்ரீனிவாசன் என்பவர், தமது வீட்டு நிகழ்ச்சிக்காக, குடிநீர் கேன்களை வாங்கியுள்ளார். அந்த குடிநீரை குடித்தவர்களுக்கு, வாந்தி - பேதி ஏற்பட்டுள்ளது. அப்போது, குடிநீர் கேனில் ஏராளமான புழுக்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த குடிநீர் கேன், சுகாதாரமற்ற முறையில் சுத்திகரிக்கப்படாமல் நிரப்பப்பட்டதை அறிந்தனர். இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் குடிநீர் நிறுவனங்களில்,  அதிகாரிகள் ஆய்வு நடத்தி, சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் வாழும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்