விவசாயிகள் பெயரில் ரூ.350 கோடி கடன் : நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் பெயரில், சுமார் 350 கோடி ரூபாய் கடன் வாங்கிய சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் பெயரில் ரூ.350 கோடி கடன் : நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
x
விவசாயிகள் பெயரில், சுமார் 350 கோடி ரூபாய் கடன் வாங்கிய சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் அருகே இரண்டு தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு சுமார் 35 கோடி ரூபாய் அளவில் நிலுவைத் தொகை வழங்காமல் உள்ளது. இந்நிலையில், சுமார் 350 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு தெரியாமல், அவர்களது பெயர்களில் வங்கிகள் கடனுதவி வழங்கி உள்ளது. இந்த நிலையில், ஆலைகள் திவாலானதாக அறிவிப்பு வெளியிடப்பட்டதால், அதிர்ச்சியடைந்த விவசாயிகள், கும்பகோணம் கோட்டாட்சியரிடம் முறையிட்டனர். அப்போது, ஆலை நிர்வாகிகள், வங்கி அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்