மாற்றுச் சான்று தராமல் மிரட்டும் கல்லூரி : ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா நடத்திய மாணவி

மாற்றுச் சான்றிதழ் தராமால், மிரட்டும் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாணவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மாற்றுச் சான்று தராமல் மிரட்டும் கல்லூரி : ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா நடத்திய மாணவி
x
மாற்றுச் சான்றிதழ் தராமால், மிரட்டும் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாணவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  கன்னியாகுமரி மாவட்டம் அழகப்ப புரம் பகுதியில் உள்ள புனித ஜோசப் சேவியர் கல்லூரி, மருத்துவ கவுன்சில் ஆய்வின் முடிவில், மூடப்பட்டது. அங்கிருந்த மாணவிகள், மார்த்தாண்டம் அன்னம்மாள் செவிலியர் கல்லூரியில் சேர்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில்,ஜோசப் சேவியர் கல்லூரியில் மாற்றுச்சான்று தர மறுப்பதாகவும், 66 ஆயிரம் ரூபாய் கட்டுமாறு மிரட்டுவதாகவும், சுகன்யா என்ற மாணவி, ஆட்சியர் அலுவலகத்தில், தர்ணா போராட்டம் நடத்தினார். 'தேர்வு நெருங்கும் நிலையில், தமது எதிர்காலாம் பாழாகிவிடும்' என்று கூறிய மாணவி, தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று, கண்ணீருடன் தெரிவித்தார். தமது மாற்றுச் சான்றை பெற்றுத் தருமாறு, அவர் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்