ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே விபத்துக்கு காரணமான அரசுப்பேருந்தை பிடித்த போலீசார்
வேதமாணிக்கம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே, வேதமாணிக்கம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்நிலையில், விபத்துக்கு காரணமான பேருந்தை, போலீசார், 6 மணி நேரத்திற்கு பிறகு தேடி கண்டுபிடித்தனர்.பின்னர், அந்த பேருந்தை காவல்நிலையம் கொண்டு வந்த போலீசார், ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர். ஆனால்,விபத்துக்கு தாங்கள் காரணம் இல்லை என கூறி, அரசு போக்குவரத்து அதிகாரிகள் காவல் துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story