திண்டிவனம்: நீதிபதி முன் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற கைதி

திண்டிவனம் ரோசன் காலனி பகுதியை சேர்ந்த சரண்ராஜ் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
திண்டிவனம்: நீதிபதி முன் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற கைதி
x
திண்டிவனம் ரோசன் காலனி பகுதியை சேர்ந்த சரண்ராஜ் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திண்டிவனம் அடுத்தள்ள ஜக்காம்பேட்டை நீதிமன்றத்தில் சரண்ராஜை  ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து சென்றனர்.அப்போது நீதிபதி முன்னிலையில் சரண்ராஜ் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.உடனடியாக போலீசார் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். முன்னதாக திண்டிவனம் காவல் நிலையத்திலும் சரண்ராஜ் கழுத்தினை அறுத்துகொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்