சண்முகநதியில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற இந்து தமிழர் கட்சியினர் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகநதியில் சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரி இந்து தமிழர் கட்சியினர் நூதன முறையில் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி சண்முகநதியில் சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரி, இந்து தமிழர் கட்சியினர், நூதன முறையில், ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்து தமிழர் கட்சி சார்பில் இராம.ரவிக்குமார் தலைமையில் இருபதுக்கும், மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி, காவடி எடுத்து வந்தனர். பின்னர், கழிவு நீரை, கொண்டு வந்து அலுவலகத்தில் கீழே ஊற்றி, மாவட்ட ஆட்சியரிடம் நேரில் கோரிக்கை மனுவை அளித்தனர்.
Next Story