தமிழகத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை : சென்னை உயர்நீதிமன்றம்

அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை விதிக்கும் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை : சென்னை உயர்நீதிமன்றம்
x
சென்னை தாம்பரம் அடுத்த கேம்ப் ரோட்டில் கடந்த 8 ம் தேதி, அதிவேகமாக வந்த கார் ஒன்று இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதில், கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன் வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.இந்த வழக்கு, மறு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்திற்கு உதவியாக வழக்கறிஞர் விஜய ராகவன், கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த விபத்து குறித்தும், விதிமுறை மீறல் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்தார்.மேலும், மும்பை, ஐதராபாத், போன்ற நகரங்களில் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து, உடனுக்குடன் தண்டனை வழங்கப்படும் திட்டத்தை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்குமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, இழப்பீடு வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க தாம்பரம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஆஜர்படுத்தும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை முதல் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்