எங்களின் தாயை கண்டுபிடித்து தாருங்கள் - மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்த பிள்ளைகள்

எங்களின் தாயை கண்டுபிடித்து தாருங்கள் என நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் 12 வயதான சிறுமியும் அவரது தம்பியும் மனு அளித்தனர்.
எங்களின் தாயை கண்டுபிடித்து தாருங்கள் - மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்த பிள்ளைகள்
x
பரமத்திவேலூரை அடுத்த பொத்தனூர் கிராமத்தை சேர்ந்த 12 வயதான கார்த்திகா 9 வயதான தமிழ்செல்வன் ஆகிய 2 பேரும் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியத்தை சந்தித்து மனு அளித்தனர். அதில் தன் தந்தையுடன் சண்டை போட்டுக் கொண்டு போன தாய் முத்துலட்சுமியை கண்டுபிடித்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களாக தாயை பிரிந்து தாங்கள் தவித்து வருவதாகவும் எனவே தாயுடன் தங்களை சேர்த்து வைக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்