1,100 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் : தங்கத்தின் மதிப்பு ரூ37 லட்சம் - 4 பேரிடம் விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் ஆயிரத்து 100 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
1,100 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் : தங்கத்தின் மதிப்பு ரூ37 லட்சம் - 4 பேரிடம் விசாரணை
x
சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை, மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தொண்டியை சேர்ந்த முகமது ரபீக் முகமது ரியாஸ் அலி மற்றும் எஸ். பி. பட்டிணத்தை சேர்ந்த முகமது ஹசீர்,  முகமது முஸ்தபா ஆகியோர் தங்களது உடலில் மறைத்து எடுத்து வந்த ஆயிரத்து 100 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 37 லட்சம் ரூபாய். இதுகுறித்து அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்