தேர்வு பெற்ற சிறப்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் - உடனடியாக பணி நியமனம் செய்ய கோரிக்கை
பள்ளிக்கல்வித்துறையில் உடற்கல்வி, தையல், ஓவியம் இசை ஆகிய பிரிவுகளில் தேர்வு பெற்ற சிறப்பு ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுகளாக பணி நியமனம் செய்யப்படாததால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மற்ற 3 பிரிவை சேர்ந்தவர்கள் தங்களை உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Next Story