மன்னார்குடி : தீ விபத்து - 15 குடிசைகள் எரிந்து சேதம்

மன்னார்குடி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 15க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
மன்னார்குடி : தீ விபத்து - 15 குடிசைகள் எரிந்து சேதம்
x
மதுக்கூர் சாலையில் உள்ள கோபிரலியம் என்ற இடத்தில் இந்த தீ விபத்து நிகழ்ந்தது. தகவல் அறிந்து 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே தீ விபத்தில் சிக்கிய மூதாட்டி ஒருவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 15க்கும் மேற்பட்ட வீடுகள் தீ விபத்தில் சிக்கியதால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர்.

Next Story

மேலும் செய்திகள்