ரூ.1 கோடி மதிப்பிலான விசைப்படகு கடலில் மூழ்கியது - விசைப்படகை மீட்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்
நாகையில் கடல் சீற்றத்தால் நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி மதிப்பிலான விசைப்படகு கடலில் மூழ்கியது.
நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த சின்னதம்பி என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கடலில் மூழ்குவதை கண்ட சக மீனவர்கள் உடனடியாக படகில் இருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகளை மீட்டனர். தொடர்ந்து படகை மீட்கும் பணியில் 20 படகுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் சேதமடைந்த 50 லட்ச ரூபாய் மதிப்பிலான படகிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story