நாகை : தண்ணீர் பிரச்சினை குறித்து பேச கிராம சபை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் - நாம் தமிழர் கட்சியினர்
நாகை மாவட்டத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்து பேச கிராம சபை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமாரிடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். காமேஸ்வரம், பூவைத்தேடி, கீழையூர் கிராமத்தில் உள்ளவர்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படவில்லை என மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. நாகை மக்களின் தண்ணீர் தாகம் தீர்க்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் கேட்டுக்கொண்டனர்.
Next Story