கள்ளக் காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை : சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு

சென்னையில் பட்டப்பகலில் கள்ள காதல் விவகாரத்தில் இளைஞர் குத்திக்கொல்லப்பட்டார்.
கள்ளக் காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை : சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு
x
சென்னையில் பட்டப்பகலில் கள்ள காதல் விவகாரத்தில் இளைஞர் குத்திக்கொல்லப்பட்டார். மயிலாப்பூ​ரை சேர்ந்த தினேஷ், நடந்து சென்ற போது ஆட்டோவில் வந்த இரண்டு பேர் கத்தியால் அவரை குத்தியுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் விழுந்த தினேஷை அருகே இருந்தவர்கள் சிகிச்சைக்காக  ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே சிகிச்சைப்பலனின்றி தினேஷ் உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அருகே உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.  முதற்கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட தினேஷ்க்கு அதே பகுதியை சேர்ந்த  மணமான பெண் ஒருவருக்கும் கள்ள தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு ஏற்கனவே காவல் நிலையத்தில் உள்ள நிலையில், தன் மனைவியுடன் தினேஷ் தொடர்ந்து பழகி வந்ததால் ஆத்திரமடைந்த கணவர்  தனது நண்பருடன் சேர்ந்துகொலை செய்துள்ளார். , இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார்,  கொலையாளிகள் இருவருரையும் தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்