ஒசூர்: சாலையோரம் கிடந்த நாட்டுத் துப்பாக்கி

ஒசூர் அருகே குந்துகோட்டை, சாலிவரம் கிராமங்களுக்கு செல்லும் சாலையில் கேட்பாரற்று கிடந்த நாட்டுத்துப்பாக்கி ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
ஒசூர்: சாலையோரம் கிடந்த நாட்டுத் துப்பாக்கி
x
ஒசூர் அருகே குந்துகோட்டை, சாலிவரம் கிராமங்களுக்கு செல்லும் சாலையில் கேட்பாரற்று கிடந்த நாட்டுத்துப்பாக்கி ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.  தேன்கனிகோட்டை போலீசார் ரோந்து பணி சென்ற போது, சாலையோரத்தில் நாட்டுத்துப்பாக்கி கேட்பாரற்று கிடந்துள்ளது. உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தாமாக முன்வந்து நாட்டுத் துப்பாக்கிகளை ஒப்படைக்கலாம் என்றும் காவல்துறை அறிவிப்புகள் வெளியிட்டு வரும் நிலையில் இந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் துப்பாக்கி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



Next Story

மேலும் செய்திகள்