வார விடுமுறையையொட்டி குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையையொட்டி குற்றலாத்தில் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
வார விடுமுறையையொட்டி குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
வார விடுமுறையையொட்டி குற்றலாத்தில் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்யாத நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் மிக குறைவான நீர்வரத்தே உள்ளது. எனினும் அங்கு சுற்றுலா பயணிகள் திரண்டனர். ஐந்தருவியில் குளிப்பதற்காக பேருந்து நிலையம் வரை சுற்றுலாபயணிகளின் வரிசை காணப்படுகிறது. வரிசையில் காத்திருக்க முடியாத சுற்றுலா பயணிகள் பேரூராட்சி குடிநீர் தொட்டியில் இருந்து நிரம்பி வழிகின்ற தண்ணீரில் குளித்து செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்