தினத்தந்தி சார்பாக மதுரையில் அரசு பணி தேர்வுகள் குறித்த பயிற்சி வகுப்பு

அரசு பணிக்கான தேர்வுகள் எழுதும் மாணவ-மாணவியர்க்காக தினத்தந்தி சார்பாக மதுரையில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
தினத்தந்தி சார்பாக மதுரையில் அரசு பணி தேர்வுகள் குறித்த பயிற்சி வகுப்பு
x
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 , குரூப் 2 A, குரூப் 4, வி.ஏ.ஒ. போன்ற அரசு பணிகளுக்கான தேர்வு எழுதுபவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. தினத்தந்தி நாளிதழ் மற்றும் சென்னை ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடெமி இணைந்து நடத்திய வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அந்தமான் போன்ற இடங்களிலிருந்தும் ஏராளமான மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். போட்டி தேர்வுகளும் வேலை வாய்ப்பும் என்ற தலைப்பில் பேராசிரியர் நெல்லை கவி நேசன் மற்றும் பேராசிரியை முனைவர்.ஆர்.காயத்ரி ஆகியோர் ஊக்க உரையாற்றினார்கள். தங்களுக்கான பாடத்தை எவ்வாறு கால அட்டவணையிட்டு படிப்பது பாடத்தை எவ்வாறு வரைமுறைபடுத்தி படிப்பது உள்ளிட்ட கருத்துக்கள் குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்