தமிழகத்தில் மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தம்

தமிழகத்தில், மருத்துவர்கள், நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
தமிழகத்தில் மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தம்
x
தமிழகத்தில், மருத்துவர்கள், நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இந்திய மருத்துவ சங்க மாநிலத் தலைவர் கனகசபாபதி, மாநில செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கொல்கத்தா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 2 பயிற்சி மருத்துவர்கள், கொடூரமாக தாக்கப்பட்டது, அவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளதாக, சுட்டிக் காட்டியுள்ளனர். இதை கண்டித்து, நாளை 17-ந்தேதி காலை 6 மணி முதல் 18-ம் தேதி காலை 6 மணி வரையிலான 24 மணி நேரம், தமிழகம் முழுவதும் மருத்துவ சேவைகளை நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும், மக்கள் நலன் கருதி, அத்தியாவசிய மருத்துவ சேவை தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்