தூத்துக்குடி : தடைகாலத்திற்கு பின் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் ஏமாற்றம்
தூத்துக்குடியில் மீன்பிடி தடைகாலத்திற்கு பின், கடலுக்கு சென்ற விசைபடகு மீனவர்களுக்கு எதிர்பார்த்த மீன்கள் கிடைக்கவில்லை.
தூத்துக்குடியில் மீன்பிடி தடைகாலத்திற்கு பின், கடலுக்கு சென்ற விசைபடகு மீனவர்களுக்கு எதிர்பார்த்த மீன்கள் கிடைக்கவில்லை. மீன்கள் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு, ஏப்ரல் 15 முதல், 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் விதிக்கப்பட்டது. இந்த தடைகாலம் முடிவடைந்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட விசைப்படகு மீனவர்கள் சனிக்கிழமை அதிகாலை கடலுக்கு சென்று இரவு கரை திரும்பினர். ஆனால், எதிர்பார்த்த மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
Next Story