ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு - ஜூலை 2 இல் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், ஜூலை 2ஆம் தேதி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு - ஜூலை 2 இல் போராட்டம்
x
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், ஜூலை 2ஆம் தேதி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.  தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில், கிராமம் கிராமமாக, விவசாயிகளை திரட்டி, காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என, ஆலோசிக்கப்பட்டது. காவிரியில் தண்ணீரை தடுக்கக் கூடாது என்றும், இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்