நிலத்தை ஜப்தி செய்யப் போவதாக வங்கி நோட்டீஸ் - மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை

நிலத்தை ஜப்தி செய்யப் போவதாக, வங்கி நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டியதால், விவசாயி ஒருவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நிலத்தை ஜப்தி செய்யப் போவதாக வங்கி நோட்டீஸ் - மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை
x
நிலத்தை ஜப்தி செய்யப் போவதாக, வங்கி நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டியதால், விவசாயி ஒருவர் , விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குமணன்தொழு கிராமத்தை சேர்ந்த ஜெயக்கொடி என்ற விவசாயி, நிலத்தை அடமானம் வைத்து வங்கியில் கடன் வாங்கிய நிலையில், அதற்கான தவணை தொகையை சரிவர செலுத்தவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், வங்கி நிர்வாகம் நிலத்தை ஜப்தி செய்யப்போவதாக கூறி, அவரது வீட்டில் நோட்டீஸ் ஒன்றை ஒட்டியுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த ஜெயக்கொடி, கடந்த 13ஆம் தேதி பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். 


Next Story

மேலும் செய்திகள்