காவல்துறையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் - 7 பேர் கைது

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியில் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், காவல்துறையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
காவல்துறையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் - 7 பேர் கைது
x
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியில் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், காவல்துறையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் காவல்துறையினரை தாக்கியது தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அப்பகுதிகளில் பதற்றம் நீடித்து வருவதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். சருத்துபட்டி, லட்சுமிபுரம் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கல்வீச்சில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கி உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்