சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் வெட்டப்பட்ட தேன்மொழியின் உடல் நிலையில் முன்னேற்றம்

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் நேற்றிரவு தேன்மொழி என்ற பெண் எழும்பூர் செல்வதற்காக ரயிலுக்காக காத்திருந்தார்.
சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் வெட்டப்பட்ட தேன்மொழியின் உடல் நிலையில் முன்னேற்றம்
x
சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் நேற்றிரவு தேன்மொழி என்ற பெண் எழும்பூர் செல்வதற்காக ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சுரேந்தர் என்ற இளைஞர் யாரும் எதிர்பாராத வகையில் தேன்மொழியை அரிவாளால் வெட்டியதுடன், ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதலை அடுத்து இந்த தாக்குதலை சுரேந்தர் அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது. மருத்துவமனைக்கு வந்த ரயில்வே போலீசார் மற்றும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ராஜேந்திரன் ஆகியோர் தேன்மொழியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் தேன்மொழி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சுரேந்தர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்