திமுக எம்.எல்.ஏ ராதாமணி இறுதி ஊர்வலம் : சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் அஞ்சலி
திமுக சட்டமன்ற உறுப்பினர் மறைந்த ராதாமணி உடலுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
திமுக சட்டமன்ற உறுப்பினர், மறைந்த ராதாமணி உடலுக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் அஞ்சலி செலுத்தினார். விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றிய திமுக செயலாளராக 33 ஆண்டுகள் இருந்த அவர், 2016 ஆம் ஆண்டு முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது இறுதி ஊர்வலம், சொந்த ஊரான கண்டமங்கலம் ஒன்றியம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தில் அரசு மரியாதையுடன் நடைபெற்றது. இந்த நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் நேரில் சென்று ராதாமணி உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Next Story