இன்று நள்ளிரவுடன் நிறைவு : கடலுக்கு போகப் போவதில்லை என மீனவர்கள் திட்டவட்டம்

மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெற உள்ள நிலையில் கடலுக்கு செல்லப்போவதில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று நள்ளிரவுடன் நிறைவு : கடலுக்கு போகப் போவதில்லை என மீனவர்கள் திட்டவட்டம்
x
மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெற உள்ள நிலையில் கடலுக்கு செல்லப்போவதில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த மீன்வளத்துறை தடை விதித்துள்ள நிலையில் நேற்று லாரி மூலம் கடலூர் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சுருக்குமடி வலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை கண்டித்து இன்று கடலூரில் மீனவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மீனவர்கள், இன்று நள்ளிரவுடன் தடைக்காலம் முடிந்தாலும் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு இந்த நான்கு மாவட்ட மீனவர்களும் கடலுக்கு செல்ல போவதில்லை எனவும் அதுவரையில் மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைக்கப் போவதாகவும் தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்