இந்திய விமானப்படை விமான விபத்து : கோவை வீரர் ஒருவரும் உயிரிழப்பு

விபத்தில் சிக்கிய இந்திய விமானப்படை விமானத்தில் பயணித்த 13 வீரர்களில் ,கோவையை சேர்ந்த ஒருவரும் அடக்கம் என தெரியவந்துள்ளது.
இந்திய விமானப்படை விமான விபத்து : கோவை வீரர் ஒருவரும் உயிரிழப்பு
x
அஸ்ஸாமில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படையின்    ஏ 32 ரக போர் விமானம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி, அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள  சியாங் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியான 13 பேரின் புகைப்படங்கள்  இந்திய விமானப் படையால் வெளியிடப்பட்டது. இதில்  கேரளாவை பூர்வீகமாக கொண்ட கோவையை சேர்ந்த  வினோத் ஹரிஹரனும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டு நிகழ்ந்த புயல் வெள்ளத்தின் போது, மீட்பு பணியில் வினோத் சிறப்பாக பணியாற்றியதாகவும், அவரது  உடல் நாளை அவரது  குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என  இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த 2011  ஆம் ஆண்டு முதல் விமானப்படையில் பணியாற்றி வரும் வினோத்தின் அண்ணன் விவேக்கும் விமானபடையில் பணியாற்றி வருகிறார். 

Next Story

மேலும் செய்திகள்