புதுக்கோட்டை : குடிநீர் வழங்க கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

புதுக்கோட்டை அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை : குடிநீர் வழங்க கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
x
புதுக்கோட்டை அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். விராலிமலை அருகே உள்ள பல்வேறு கிராமங்களுக்கு ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் காவிரி குடிநீர் வாயிலாக தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போதும் கடும் வறட்சி நிலவுவதால் கடந்த ஓரு மாதமாக இப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள், இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். காலி குடங்களுடன் மணப்பாறை - புதுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளோடு பொதுமக்கள் வாக்குவாதம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்