ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 36 கிலோ கஞ்சா பறிமுதல் : ரயிலில் கஞ்சா கடத்திய பெண் உட்பட 4 பேர் கைது

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த திருசெங்கோடு போலீசார், கஞ்சாவை ரயிலில் கடத்திய பெண் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.
ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 36 கிலோ கஞ்சா பறிமுதல் : ரயிலில் கஞ்சா கடத்திய பெண் உட்பட 4 பேர் கைது
x
ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த திருசெங்கோடு போலீசார், கஞ்சாவை ரயிலில் கடத்திய பெண் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர். ஆலப்புழா விரைவு ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து திருச்செங்கோடு  டி.எஸ்.பி சண்முகம் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் பொது பெட்டியில் பயணம் செய்த 4 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதில் கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்களை கைது செய்த போலீசார் கடத்தி வரப்பட்ட கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து 4  பேரையும், சேலம் போதை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்