திருச்சியில் ஆட்சியர் காலில் விழுந்து விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் வேங்கூரில் மக்கள் நேர்காணல் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.
திருச்சியில் ஆட்சியர் காலில் விழுந்து விவசாயிகள் போராட்டம்
x
திருச்சியில் வேங்கூரில் மக்கள் நேர்காணல் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது விவசாயிகள் திடீரென மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை காலில் விழுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூரிலிருந்து காவிரி நீர் திறக்கப்படாததை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கல்லணையில் காவிரி மணலில் படுத்து நூதனமாக விவசாயிகள் போராடினர். அதை தொடர்ந்து  ஆட்சியர் காலில் விழுந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென காலில் விழுந்ததால் ஆட்சியர் அண்ணாதுரை அதிர்ச்சியடைந்தார். இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள் ஆட்சியரிடம் தங்களது குறைகளை சொல்லிவிட்டு கலைந்து சென்றனர்.    


Next Story

மேலும் செய்திகள்