மழை நீரை சேமிக்கும் இயற்கை விவசாயி : இயந்திரங்கள் மூலம் கிணற்று நீர் சுத்திகரிப்பு

நாகை மாவட்டம் சீர்காழி அருகே இயற்கை விவசாயி ஒருவர் மழை நீரை சேமித்து சுத்திகரித்து பொது மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.
மழை நீரை சேமிக்கும் இயற்கை விவசாயி : இயந்திரங்கள் மூலம் கிணற்று நீர் சுத்திகரிப்பு
x
சீர்காழியை அடுத்த திருவெண்காட்டை சேர்ந்த காசிராமன் என்பவர் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகிறார். அவர் மழை பெய்யும்  போது தண்ணீரை கிணற்றில் சேமித்து  பின்பு அதை பயன்படுத்தி வருகிறார். தற்போது தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் காசிராமன், கிணற்றில்  சேமித்த மழைநீரை இயந்திரங்கள் மூலம் சுத்திகரித்து அப்பகுதி மக்களுக்கு இலவசமாக  வழங்கி வருகிறார். நாளொன்றுக்கு 5 ஆயிரம் லிட்டர் வரை  சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கி வரும் காசிராமனுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்